
உத்திரபிரதேச மாநிலம் லக்னாவை சேர்ந்தவர் சுனிதா. இவருக்கு 40 வயது ஆகிறது. இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று சுனிதாவின் பேரன் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக சுனிதாவுக்கும், அந்த சிறுவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ராஜ்குமார், ராம்பரோஸ், ராம்கிஷோர் ஆகியோர் சுனிதாவை சரமாரியாக தாக்கி, அவரது கை கால்கள் மீது செங்கற்களை தூக்கி போட்டனர்.
இதனால் படுகாயமடைந்த சுனிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுனிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.