இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கடுமையாகப் போராடிய போதிலும், இறுதி ஓவர்களில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது. மைதானத்தில் ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்த அதே வேளையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் சில வீடியோக்கள் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளன.
“இந்திய அணிக்குள் தற்போதே பிளவு ஏற்பட்டுவிட்டதா?” என்ற அதிர்ச்சிகரமான கேள்வியை ரசிகர்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். அதற்கு முக்கியக் காரணம், போட்டியின் போது ‘டிரின்க்ஸ் பிரேக்’ இடைவேளையில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மைதானத்திற்குள் வந்து வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிய விதம் தான்.
I think it’s unfair of us to blame poor Shreyas Iyer for whatever happened in Ireland and today. It’s clear that Gambhir has appointed the perfect puppet captain for himself for T20Is. Blame Gambhir.pic.twitter.com/Q7fV50qykM
— Conqueror (@ConquerorDGAF) July 4, 2026
கடந்த 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்ற பிறகு, அதன் வெற்றிக்கான பெருமையை எடுத்துக் கொள்வதில் கௌதம் கம்பீருக்கும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் இடையே மோதல் போக்கு நிலவியதாகக் கூறப்பட்டது. அந்தப் பழைய பகை இன்னும் தொடர்கிறதோ என்ற சந்தேகத்தை தற்போதைய வீடியோ உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.
மைதானத்திற்குள் வந்த கம்பீர், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் மட்டுமே தீவிரமாக ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார். பயிற்சியாளர் பேசுவதைக் கேட்பதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் அருகில் சென்றபோது கூட, கம்பீர் அவரைச் சற்றும் கண்டுகொள்ளாமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டார். இந்தச் சம்பவம் இருவருக்கும் இடையே எல்லாம் சரியாக இல்லை என்பதைப் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
முன்னதாக, மோசமான ஃபார்ம் காரணமாக சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டபோது, அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு கௌதம் கம்பீர் சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷனின் பெயரையே பரிந்துரைத்திருந்தார். இதனால் தற்போது இஷான் கிஷன், கம்பீரின் சொல்படி தான் ஆடுகிறாரா என்ற விவாதமும் சோசியல் மீடியாவில் சூடுபிடித்துள்ளது. இதனால், மான்செஸ்டர் தோல்விக்கு கேப்டன் ஸ்ரேயாஸை மட்டும் குறை சொல்ல முடியாது என்றும், அணியில் இருக்கும் இத்தகைய உட்கட்சிப் பூசல்களும் தான் காரணம் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
