சென்னையில் இசிஆர் சாலையில்  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சியில் இடநெருக்கடி உள்ளிட்ட ஏராளமான குளறுபடி நடந்தது. இந்த விவாகரத்தில் பலரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் ரஹ்மான் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் நிர்வாக குளறுபடியால் நிகழ்ச்சி பார்க்க முடியாதவர்கள் டிக்கெட் நகலை அனுப்பி பணத்தை திருப்பி பெற்றுக் கொள்ளலாம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருந்தார். இதன்படி டிக்கெட் நகலை 4 ஆயிரம் மின்னஞ்சலில் அனுப்பிய நிலையில் முதற்கட்டமாக 400 பேருக்கு ரஹ்மான் பணத்தை திருப்பி அளித்துள்ளார்.