கோயம்புத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் இன்று வெள்ளிக்கிழமை காலை தமிழகத்தின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே அங்கிருந்த பாதுகாப்பு படையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.  இவருடைய உடல் நேற்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் டிஐஜி விஜயகுமார் தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. நேற்று காலை 6.30 மணிக்கு DSR அறைக்கு சென்ற விஜயகுமார் 6.40 மணியளவில் காவலர் ரவி வர்மாவிடம் பால் வாங்கி குடித்துவிட்டு, அங்கு இருந்த 183 என்ற 9 MM துப்பாக்கியை எடுத்து பயன்படுத்தும் முறையை கேட்டுள்ளார். அதன்பின் ரவி வர்மா டி-ஷர்ட் போட்டு வெளியே வருவதற்குள், துப்பாக்கியால் சுட்டு ரத்த காயத்துடன் கீழே கிடந்துள்ளார்.