தமிழகத்தில் டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த டாஸ்மாக் ஊழல் விவகாரம் தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகிறது வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இதனை எதிர்த்து விக்ரம் மற்றும் ஆகாஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் எதன் அடிப்படையில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதோடு எதற்காக விக்ரம் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினர். உங்களுக்கு சீல் வைப்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது நீதிபதிகள் கேட்ட நிலையில் அதற்கு அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்காக சென்றபோது அவர்களது வீடு மற்றும் அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்ததால் சீல் வைத்ததாக கூறினர்.

அப்போது டாஸ்மாக் விவகாரத்திற்கும் தங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாத நிலையில் அவர்கள் சோதனை நடத்தியதாக மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது. மேலும் இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.