உத்தரப் பிரதேசம் மாநிலம் நசீர்ப்பூர் கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கடந்த 22 ஆம் தேதி யமுனை ஆற்றில் வலை விரித்து மீன்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களது வலையில் டால்பின் ஒன்று சிக்கி உள்ளது. மீனவர்கள் நினைத்திருந்தால் டால்ஃபினை விடுவித்து இருக்கலாம்.

ஆனால் அவர்கள் அதற்கு மாறாக டால்ஃபினை பிடித்தது மட்டும் இல்லாமல் அதனை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இது குறித்த காணொளி சமூக வலைதளத்தில் வெளியானதை தொடர்ந்து நான்கு மீனவர்கள் மீதும் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.