தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் இருந்த ‘ஜெயலலிதா’ பெயரை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முதலமைச்சரின் தனித்தீர்மானத்தின் மீது உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களுக்கும் வழக்கு தொடர்ந்துள்ளீர்களா? மசோதாக்களில் உள்ள சட்ட சிக்கல்களை அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

அமைச்சர் கூறவேண்டிய கருத்துகளை சபாநாயகரே தெரிவித்து வருகிறார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பேரவையை கூட்டியது ஏன்..? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.