
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த மே இரண்டாம் தேதி உயிரிழந்தார். இவரது மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் ஜெயக்குமார் இறந்து கிடந்த இடத்திலிருந்து டார்ச் லைட் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே இரண்டாம் தேதி ஜெயக்குமார் வாங்கிய அதே டார்ச் லைட் தானா? என போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். தொடர்ந்து அந்த டார்ச் லைட் மற்றும் பேட்டரிகளை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.