
ரயிலில் தட்கல் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என இந்திய ரயில்வே கூறியுள்ளது. வருகிற ஜூலை 1ம் தேதி முதல் IRCTC-ல் ஆதார் எண்ணை பயன்படுத்தி VERIFY செய்யப்பட்ட கணக்குகளில் இருந்து மட்டுமே தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
ரயில் டிக்கெட் தட்கல் டிக்கெட் பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடத்திலேயே ஏஜெண்டுகளே அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்து விடுகின்றனர். இதனால் சாதாரண மக்களுக்கு டிக்கெட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
தட்கல் சேவையின் பயன் பொதுமக்களுக்கு முழுமையாக சென்று சேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.