ஜி20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடந்து வருகிறது. பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். உலகத் தலைவர்கள் ஒரு பூமி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கூட்டங்களின் போது, ​​ பிரதமர் நரேந்திர  மோடி அமர்ந்திருந்த இடத்தின் பெயர் பலகையில், ‘ இந்தியா’ என்பதற்கு பதிலாக, ‘பாரத்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது. நாட்டின் பெயரை பாரத் என மாற்றும் நடிவடிக்கையின் ஒரு பாகமாக அரசு இதனை தற்போதே தொடங்கிவிட்டது என்று கூறப்படுகிறது.