
இந்திய அணியினர் சமீபத்தில் ஜிம்பாவேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய நிலையில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்த போட்டியின் கடைசி தொடரில் ஷிவம் துபே அசத்தலாக விளையாடினார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதோடு அதற்கான பரிசு தொகையும் கொடுக்கப்பட்டது.
ஆனால் இந்த பரிசு தொகையை அந்த இடத்தில் வைத்து ஜிம்பாவே மைதானத்தில் உள்ள பணியாளர்களுக்கு ஷிவம் துபே கொடுத்துவிட்டார். அதாவது 500 டாலர்கள் பரிசாக வென்ற நிலையில் அதனை அவர்களுக்கு கொடுத்து விட்டார். மேலும் இதற்கான காரணத்தை தற்போது அவர் கூறியுள்ளார். அதாவது தங்களுக்கு மைதானத்தில் சிறப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுத்து வெற்றி பெறுவதற்கு உதவிய பராமரிப்பாளர்களுக்கு என்னுடைய சிறிய பங்களிப்பாக அந்த பணத்தை கொடுத்து உதவியதாக கூறியுள்ளார்.