ஜாா்கண்டில் இருந்து பெங்களூரு வரை வருகிற 6, 7 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சாா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பபில் “ஜாா்கண்ட் மாநிலம் டாடா நகரிலிருந்து ஜன.6ம் தேதி நாளை காலை 4:50 மணிக்கு புறப்படும் ஒரு வழி சிறப்பு ரயில் (வண்டி எண்: 08885) ஒடிஸா, ஆந்திரம், தமிழகம் வழியாக வரும் 8ம் தேதி இரவு 8 மணிக்கு கா்நாடக மாநிலம் பெங்களூரு சென்றடையும்.

அத்துடன் ஹாத்தியாவிலிருந்து வரும் 7-ஆம் தேதி காலை 4:50 மணிக்கு புறப்படும் மற்றொரு ஒரு வழி சிறப்பு ரயில் (வண்டி எண்: 08887) ஒடிஸா, ஆந்திரம், தமிழகம் வழியாக ஜன.8-ஆம் தேதி இரவு 8 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரயில்கள் பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியே செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.