கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் பிலிப் (73) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆலப்புழா பகுதியில் சேர்ந்த ஒரு 13 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி தனியாக அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவரின் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வந்த நிலையில் முதியவர் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் போலீசார் அவரை வலைவீசி தேடிவந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் இடம் தெரிந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.