
டெல்லியை சேர்ந்த உபேந்திர சிங் என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு இந்துருக்கு விமானத்தை பிடிக்க தயாரானார். அவர் அதிகாலை 3 15 மணிக்கு ஊபர் வண்டியை முன்பதிவு செய்தார். ஆனால் அந்த வாகனம் சரியான நேரத்திற்கு வராததால் உபேந்திரா சிங் மன உளைச்சலுக்கு ஆளானார். அவர் ஊபர் நிறுவனத்தை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் டாக்ஸியை பிடித்து விமான நிலையத்தை அடைந்தார்.
ஆனால் உபேந்திர சிங்கும், அவரது மனைவியும் விமானத்தை தவறவிட்டனர். இதனால் மன உளைச்சலில் உபேந்திர சிங் சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பினார். அதற்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை. இதனால் உபேந்திர சிங் ஊபர் சேவையில் குறைபாடு எனக் கூறி டெல்லி நுகர்வோர் ஆணையத்தில் முறையான புகார் அளித்தார். அதனை விசாரித்த டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் உபேந்திர சிங்கருக்கு 54 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு ஊபர் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.