
பெங்களூரு குமாரசாமி லேஅவுட் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தேஜஸ் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20 நாட்களாக தேஜஸ் பள்ளிக்கு செல்லவில்லை. மேலும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். நேற்று முன்தினம் தேஜஸ் ரீல்ஸ் வீடியோ பார்த்துக்கொண்டே ஆன்லைனில் கேம் விளையாடிள்ளார். அப்போது ரவிக்குமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார்.
அவர் தனது மகனிடம் பள்ளிக்கு சரியாக செல்லாதது குறித்து கேள்வி கேட்டார். ஆனால் தேஜஸ் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் கோபமடைந்த ரவிக்குமார் கிரிக்கெட் மட்டையால் தனது மகனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த தேஜஸ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேஜஸ் உயிரிழந்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரவிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.