நகைச்சுவை நடிகர் பாலா விஜய் தொலைக்காட்சியில் முதன்முறையாக கலக்கப்போவது  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின்னர் தற்போது பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்களிடையே நீங்கா இடத்தை பிடித்து விட்டார். சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே 3 ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா 4வது முறையாக ஆதரவற்றோருக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “என் வாழ்வில் மறக்கமுடியாத நாள் இது. எனக்கு ஒரு சொந்த கார் கூட கிடையாது. பலரும், உனக்கே இல்லாதபோது ஏன் உதவுகிறாய் என்றார்கள். நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில்தான் உதவி செய்கிறேன். இதற்காக நான் யாரிடமும் 1 ரூபாய் கூட கேட்டதில்லை. என் சேவையை தொடர்ந்து செய்வேன்” என தெரிவித்துள்ளார்