
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் அப்துல் கலாம் என்பவர் வசித்து வருகிறார். இவரது அக்கா மும்தாஜ். இந்த நிலையில் அக்காவுக்கும் தன் தம்பிக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த அன்று இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால் கோபமடைந்த அப்துல் கலாம் கத்தியால் மும்தாஜை குத்தினார். இதனால் காயமடைந்து வலியில் அலறி துடித்த மும்தாஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்துல் கலாமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.