திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். இவர் கிண்டியில் உள்ள ஒரு ஹோட்டல் பப்புக்கு சென்ற போது சகீன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்.

இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் வாலிபர் அந்த பெண்ணிடம் தான் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்ததாகவும் ஆனால் அந்த பெண் தன்னை விட்டு விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்டு மனம் வேதனை அடைந்த அந்த பெண் வாலிபருக்கு ஆறுதல் கூறியதோடு பின்னர் அவர் மீது காதலில் விழுந்தார்.

இவர்கள் இருவரும் வார இறுதி நாட்களில் அதாவது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சொகுசு விடுதியில் அறையெடுத்து உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை வாலிபர் தன்னுடைய நண்பர் மற்றும் பெண் தோழியோடு சென்னைக்கு தன் காதலியை பார்க்க வந்தார்.

அவர்கள் இருவரும் திருவான்மியூரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்தனர். இவர்கள் 3 நாட்களாக உல்லாசமாக இருந்த நிலையில் இருவரும் உயர்ரக மதுபானங்களை வாங்கி வந்து குடித்த நிலையில் வாலிபருடன் வந்த நண்பரும் பெண் தோழியும் வேறொரு அறையில் இருந்தனர்.

இதில் அந்த வாலிபரும் பெண்ணும் உல்லாசமாக இருந்த நிலையில் பின்னர் தன் நண்பர்களுக்கு வீடியோ கால் மூலமாக தன்னுடைய காதலி அரைகுறை உடையுடன் இருப்பதை காட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து தன் நண்பர்களையும் ஹோட்டலுக்கு வருமாறு அவர் அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தங்கி இருந்த டோட்டல் அறையின் கழிவறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு பின்னர் உதவி கேட்டார்.

முதலில் தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு தோழிக்கு தன்னை சிலர் கடத்தி விட்டதாகவும் காப்பாற்றும்படியும் மெசேஜ் அனுப்பியதோடு அதனை whatsapp ஸ்டேட்டஸிலும் வைத்துள்ளார். இதைப்பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் அந்த பெண்ணின் நம்பரை வைத்து இடத்தை கண்டுபிடித்தனர். ஏற்கனவே அந்தப் பெண் தன்னுடைய தோழிக்கும் லொகேஷனை ஷேர் செய்திருந்தார்.

பின்னர் போலீசார் அங்கு சென்று இளம்பெண்ணை மீட்ட நிலையில் அந்த பெண் கொடுத்த புகாரின் படி அவரது காதலன் சகின் மற்றும் அவரது நண்பர் பெஜின் ஆகியோரை கைது செய்தனர். இது பற்றி வாலிபர் கூறும் போது திருவனந்தபுரம் செல்வதற்காக தன்னுடைய நண்பரிடம் கேட்க வீடியோ கால் செய்ததாகவும் ஆனால் அதனை காதலி தவறாக புரிந்து கொண்டதாகவும் கூறினார்.

இருப்பினும் போலீசார் இளம் பெண்ணின் புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.