ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக போலீசாரை ஏமாற்றி வந்த ஒரு பழைய குற்றவாளி, பெண் வேடமணிந்து கடைசியாக கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி, தயா சங்கர் வால்மீகி என்கிற பிட்டு, லகாரா பஜாரில் உள்ள சூர்யா காலனியில் வசித்து வந்தவர். இவர், போலீசாரிடமிருந்து தப்பிக்க, சேலை, கருப்பு ரவிக்கை, மங்களசூத்திரம் மற்றும் முகத்தில் தாவணி போன்ற பெண் உடைகளை அணிந்து, தனது வீடிலேயே பதுங்கி இருந்தார்.

போலீசார் பலமுறை அவரது வீட்டிற்குச் சென்றபோதும், பெண் வேடமணிந்த பிட்டு, “தயா சங்கர் இல்லையே” என பெண் குரலில் பதிலளித்து போலீசாரை ஏமாற்றி வந்துள்ளார். ஆனால் நேற்று (புதன்கிழமை) மீண்டும் அந்த வீட்டிற்கு சென்ற போலீசார், சந்தேகத்தின் பேரில் அந்த முக்காடை அகற்ற, அதிலிருந்து ஒரு ஆண் வெளியில் வந்ததை பார்த்துள்ளனர். பின்னர் விசாரணையில் அந்த நபர் தான் பிட்டு என உறுதி செய்தனர். அவரை கைது செய்த போது, அவர் சிவப்பு சேலை, மங்களசூத்திரம் மற்றும் லிப்ஸ்டிக் போன்ற மேக்கப் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் மீது பிப்ரவரி மாதம் பிரின்ஸ் சாவ்லா என்ற இளைஞரை தாக்கிய குற்றச்சாட்டு உள்ளது. பழைய தகராறு காரணமாக, சமரசம் செய்வதாகக் கூறி அழைத்துப் போய், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கம்பால் மோசமாக தாக்கி, உயிரிழக்கும் நிலைக்கே கொண்டு சென்றுள்ளனர். அந்த சம்பவத்தில் ஹேமேந்திரா (பைடா), ஹிதேஷ் (டெனியா) ஆகியோரும் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது பிட்டு கைது செய்யப்பட்ட நிலையில், மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் எனவும், இது போன்ற முறையில் போலீசாரை ஏமாற்றும் முயற்சிகள் நீண்ட நாள் நீடிக்காது என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

 

जोधपुर: पुलिस से बचने के लिए हिस्ट्रीशीटर ने पहनी साड़ी, हुआ अरेस्ट

◆ पुलिस को देखते ही उसने इशारों में बताने की कोशिश की कि दयाशंकर घर पर नहीं, लेकिन उसकी ये चालाकी हुई नाकाम

◆ दयाशंकर उर्फ बिट्टू चार महीनों से फरार चल रहा था और उसपर करीब 13 मामले दर्ज हैं#ViralVideo |… pic.twitter.com/lzXNYPe7qU

— News24 (@news24tvchannel) June 19, 2025