
சம்ரிதி யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இது செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. 18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணத்திற்கு உதவுவதுதான் முக்கிய நோக்கம். இந்த திட்டத்தில் இணைய விரும்பும் நபர்கள் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையாக இருக்க வேண்டும். தபால் நிலையங்களில் அல்லது வங்கிகளில் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் அவர்களது பெயரில் கணக்கு தொடங்கி 1000 ரூபாயை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். இந்த வைப்பு தொகையானது ஆண்டுக்கு ஒரு முறை என 21 ஆண்டுகள் பெறப்படும்.
முதலீட்டாளர்கள் ஆயிரம் ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை வைப்புத் தொகையாக செலுத்த முடியும். இவ்வாறு சேமிக்கப்படும் இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 8.2 வட்டி வழங்கப்படுகிறது. இந்நிலையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குவதற்கான முகாம் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதற்காக மார்ச் 1ஆம் தேதி அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் செயல்படும். இந்த திட்டத்தில் 10 வயதுகுட்பட்ட பெண் குழந்தைகளின் கணக்கில் பெற்றோர் ரூ.250 முதல் 1.5 லட்சம் வரை செலுத்தலாம்.