சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா.  இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் மேயர் பிரியா. இதில் பல அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதில், சென்னை மாநகராட்சியில் உள்ள 338 பள்ளிகளுக்கு ரூபாய் 92.95 கோடியில் 1690 பச்சை வண்ண பலகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது