இந்தியாவில் குழாய் மூலமாக வீடுகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு எரிவாயு இணைப்பை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் டோரண்ட் கேஸ் என்று நிறுவனம் குழாய் மூலமாக வீடுகளுக்கு கேஸ் இணைப்பை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திட்டத்திற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் செயல்படுத்த சென்னை மாநகராட்சி வழங்கி உள்ளது. அதன்படி மற்ற நிறுவனங்களின் கேபிள்கள், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை கால்வாய் ஆகியவற்றிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படக்கூடாது.

மேலும் பாலங்கள், கல்வெட்டுகள், போக்குவரத்து போன்றவற்றிற்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் வழங்கும் திட்டத்திற்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பரிந்துரை மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து அரசிடம் அனுமதிக்க அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு விரைவில் அரசு அனுமதி அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.