
சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை மிக்க பங்கு வகுக்கிறது. தினந்தோறும் பள்ளி, கல்லூரி அலுவலகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கானவர்கள் இந்த ரயிலில் பயன்படுத்தி வருகிறார்கள். சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி குமுளி பூண்டி வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் பரிந்துரையின் அடிப்படையில் புறநகர் ரயில்களில் இரண்டு அல்லது மூன்று குளிர்சாதன பெட்டிகளை இணைப்பதற்கு தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
எனவே இன்னும் ஆறு மாதங்களில் குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் சோதனை முறை ஓட்டம் தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த திட்டம் வசதியாக அமையும். இதனால் பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பொதுவாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.