தமிழகத்தில் அரசு திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் மது அருந்த அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. தற்போது இது குறித்து பேசி உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமண மண்டபங்களில் மது அருந்து அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

திருமண மண்டபங்களில் மது அருந்த ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது. சர்வதேச தரத்திலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளின் போது மற்ற மாநிலங்களில் மது அருந்து அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வகையில் தான் சேப்பாக்கம் மைதானத்திற்கும் மது அருந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.