சென்னை ராயபுரத்தில் தெருநாய் ஒன்று பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என்று மொத்தம் 28 பேரை கடித்தது. இந்த நிலையில் அந்த நாயை கல்லால் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நாயின் உடலை உடற் கூறாய்வு செய்ததில் ரேபிஸ் தொற்று பாதிப்பு உறுதியாக உள்ளது . இதனை அடுத்து நாய் கடித்த 28 பேருக்கும் ஐந்து தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள கால்நடை மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் சென்னை முழுவதும் தெருககளில் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் பணியை தீவிர படுத்தமாறு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.