மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் மற்றும் சமீபத்தில் மனிதனின் தலையை வெட்டி வேலியில் வைத்தது உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் அனைத்தும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவங்களை கண்டித்து திமுக எம்பி கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில் சென்னையில் இன்று மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது. மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளை கண்டித்து நடைபெறும் இந்த போராட்டத்தில் அனைத்து பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.