தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கி விட்டாலே ஊட்டி மற்றும் ஏற்காடு உள்ளிட்ட பல இடங்களில் மலர் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தற்போது சென்னை செம்மொழி பூங்காவில் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. பெங்களூரு, உதகை மற்றும் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மலர் வகைகளை கொண்டு கண்காட்சி நடத்தப்படுகிறது.

மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். இதற்கு மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாய் கட்டணமும், பெரியவர்களுக்கு ஐம்பது ரூபாய் நுழைவு கட்டணமும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.