இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 14ஆம் தேதி கோவையில் திமுக முப்பெரும் விழா நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பணம் மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட அதே நாள் என்பதால் நாற்பெரும் விழாவாக கொண்டாட வேண்டுமோ என்ற பயத்தில் திமுகவினர் ஒரு நாள் விழாவை தள்ளி வைத்துள்ளனர் என்பதை அறிந்தேன் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.