
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று சில பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் மேலும் இரண்டு நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவலி மற்றும் கால்வலி உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வரும் செந்தில் பாலாஜியை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். பரிசோதனைக்கு பிறகு சிகிச்சை தொடர்பான முழு மருத்துவ அறிக்கை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது