
பெங்களூரு சதாசிவநகர் பகுதியில் சேர்ந்தவர்கள் சாகர் – ஊர்மிளா தம்பதி. இவர்கள் துரித உணவகம் வைத்து நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ஊர்மிளா முகநூல் பக்கத்தில் தனது பால்கனியில் வைத்திருக்கும் செடிகள் தொடர்பான காணொளி ஒன்றை பதிவிட்டார்.
அவர் செடிகளை பதிவு செய்த போது அவர் சட்டத்திற்கு புறம்பாக வளர்த்த கஞ்சா செடிகள் பதிவாகியுள்ளது. இது காவல் துறையினரின் கவனத்திற்கு சென்று சாகர் ஊர்மிளா வீட்டிற்கு போலீசார் விறைந்துள்ளனர்.
இது குறித்து முன்னதாகவே தெரிந்து கொண்ட அத்தம்பதி கஞ்சா செடியை புடுங்கி குப்பை தொட்டியில் போட்டு மறைக்க முயற்சித்துள்ளனர். ஆனாலும் கஞ்சா செடி வளர்த்ததற்கான அடையாளங்கள் மற்றும் சில இலைகளை வைத்து காவல்துறையினர் உறுதி செய்தனர்.
பின்னர் சாகர் ஊர்மிளா தம்பதியும் தாங்கள் லாபம் பார்ப்பதற்காக கஞ்சா செடியை வளர்த்ததாக ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து 54 கிராம் கஞ்சாவும் அவர்களது தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்து காவல்துறையின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.