
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சனிக்கிழமை பிற்பகல் திடீரென வானிலை மோசமாக மாறி, பலத்த புயலுடன் மழை பெய்தது. செக்டார் 27 பகுதியில், டிஎம் சந்திப்பில் ஒரு கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஒரு போக்குவரத்து விளக்கு கம்பம் புயலால் வளைந்து அந்தக் கார் மீது விழுந்தது.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காரில் இருந்தவர்கள் அனைவரும் உயிர் தப்பினர். ஆனால் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது.
नोएडा में आंधी-तूफान और बारिश के बाद का मंजर देखिए 😨#Noida #Rain pic.twitter.com/4RqejeZkwM
— Greater Noida West (@GreaterNoidaW) May 17, 2025
இதே நேரத்தில், டிஎன்டி பறக்கும் பாதையில் ஒரு பெரிய மரம் விழுந்ததால் டெல்லி-நொய்டா இடையிலான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மணிக்கணக்கில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி இருந்தன. செக்டார் 9 பகுதியில் ஒரு மின்-ரிக்ஷா மீது மரம் விழுந்தது, ஆனால் அதில் பயணிகள் இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
नोएडा के डीएम चौराहे पर तूफान की वजह से ट्रैफिक लाइट का पोल कार पर जा गिरा। देखिए वीडियो: @NavbharatTimes pic.twitter.com/iG8tI6hKjH
— NBT Uttar Pradesh (@UPNBT) May 17, 2025
தற்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் நொய்டா ஆணையம் இணைந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வானிலை நிலையற்றதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.