சென்னை போரூரில் மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பாக பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு முதல் உரை எழுதியது மதுரைவாயில் பகுதி தான்.

தங்களுடைய சுயநலத்திற்காக அன்று ஆட்சியை அடகு வைத்தவர்கள், இன்று கட்சியை அடகு வைத்திருக்கிறார்கள். ஆளுநருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் மக்களுக்காக செயல்படுபவர் யார் என்று மக்களுக்கு வெளிக்காட்டுகிறார். ஆளுநர் விவகாரத்தில் கொதித்தெழுந்தது CM ஸ்டாலின் தான் என்றார்.