சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் காணொளி வெளியாகி வைரலாவது வழக்கம். அவற்றில் சில நகைச்சுவை கலந்ததாகவும் இருக்கும் சில சிந்திக்கும் படியும் இருக்கும் சில தண்டனையை வாங்கி கொடுக்கும் காணொளியாகவும் இருக்கும். அவ்வகையில் சமீபத்தில் காவலர் ஒருவரது காணொளி வெளியானதை தொடர்ந்து அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்கூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிபவர் சந்திப் குமார். இவர் சமீபத்தில் பைக்கில் சாகசம் செய்து காணொளி ஒன்று வெளியிட்டுள்ளார்கள். இந்த காணொளி வைரல் ஆகிய நிலையில் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் சென்றுள்ளது. இதையடுத்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் காவலர் சந்திப் குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
➡️सिपाही का रील वीडियो सोशल मीडिया पर वायरल
📷सोशल मीडिया पर रील वीडियो बनाकर डाला था
📷वायरल वीडियो का संज्ञान लेकर की गई कार्रवाई
📷कैण्ट थाने में तैनात सिपाही को किया गया सस्पेंड. #Gorakhpur@gorakhpurpolice@Uppolice pic.twitter.com/GiaTLHdxtN— Anurag Mishra (@Anuragm91) July 30, 2023