
விஜயின் தமிழக வெற்றி கழக முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. மாநாடு முடிந்த பிறகு விஜயின் அரசியல் கட்சி கொள்கைகளை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயின் அரசியல் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். முன்னதாக விஜய் தம்பி என அழைத்த சீமான் அதன் பிறகு அரசியல் ரீதியாக எதிரி என கூறினார்.
இந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நாம் தமிழர் கட்சி சீமான் அம்பியாக இருப்பாரு. திடீர்னு அந்நியனா மாறிடுவாரு. அன்னைக்கு விஜயை தம்பின்னு சொன்னாரு. ஆனா இப்ப லாரியில் அடிபட்டு செத்துப் போயிருவ என்று சொல்கிறார். எப்போதும் ஒரே நிலைப்பாடோடு இருக்கணும். கடவுள் எல்லாருக்கும் பேசுற சக்தியை கொடுத்திருக்கிறார். அதுக்காக நம்ம வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. அப்படிங்கற கருத்தை மட்டும் நான் தெளிவா சொல்லிக்கிறேன் என கூறியுள்ளார்.