தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை சீமான் தொடங்கி 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் தோல்விகளை சந்தித்தும் தில்லாக நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது.

கமலின் மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. இரண்டு தேர்தல்களில் போட்டியிட்ட கமல் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இதை கண்ட அரசியல் ஆர்வலர்கள் சீமான் தில்லாக போட்டியிடுகிறார் ஆனால் கமல் பின்வாங்கி விட்டாரே என்று பரபரப்பாக பேசுகின்றனர்.