புதிய தொழிலில் முதலீடு செய்ய விரும்பும் இளைஞர்களுக்காக, புதிய வணிக யோசனை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசாதாரணமான இந்த வணிக முறை, குறுகிய நேரத்தில் லாபம் ஈட்டும் வழியாக உள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் _timepass_789 என்ற கணக்கில் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு இளைஞர் பொதுமக்களிடமிருந்து பெரிய நோட்டுகளைப் பெற்று, அதற்குப் பதிலாக சில்லறை நாணயங்களைக் கொடுப்பதை காணலாம். இதற்காக, அவர் ஒரு சிறிய கட்டணத்தை வசூலிக்கிறார்.

100 ரூபாய்க்கு ஈடாக 90 ரூபாய் மதிப்புள்ள சில்லறைகளை வழங்குகிறார். 10 ரூபாய்க்கு பதிலாக 9 ரூபாய்க்கு சமமான நாணயங்கள் அளிக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by _timepass_789 (@_timepass_789)

இதன் மூலம், அவர் ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் சுமார் 10% லாபம் ஈட்டுகிறார். மக்கள் சில்லறை இல்லாத சூழ்நிலைகளில், தேவைக்கேற்ப இந்த சேவையை தேர்வு செய்வதால், வணிகம் தொடர்ந்து இயங்குகிறது. இந்த வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு, கருத்துப் பகுதியில் தங்கள் விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

ஒருவர், “இந்த வணிகம் மிக வலுவானது, லாபமும் உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “பணம் ஏன் பணத்தை ஈர்க்கிறது என்பது இப்போது எனக்குப் புரிகிறது” எனப் பதிவிட்டுள்ளார். மேலும் ஒருவர், “இது பிச்சை எடுப்பதைவிட நல்ல வேலை. இங்கே பார்த்தால், இரு வேலையும் ஒரே நேரத்தில் செய்தது போல உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் தொழில் தொடங்க ஆசைப்படும் இளைஞர்களுக்கிடையில், இந்த வணிக முறை புதிய சிந்தனையை உருவாக்கி உள்ளது.