கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் அருகே கல்வராயன் மலை சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜா மற்றும் விஜயகுமாரி தம்பதி. இவர்களுடைய மகள் ராகவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரிடம் தாய் விஜயகுமாரி 2000 ரூபாய் பணத்தை கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த பணத்தை ராகவி தொலைத்து விட்ட நிலையில் விஜயகுமாரி ராகவியை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த சிறுமி வீட்டிலிருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.