
தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலை சேர்ந்தவர் பிரகாஷ்(29). இவர் பந்தல் அமைக்கும் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் கணவரை இழந்த தன்னைவிட 3 வயது மூத்த பெண்ணை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் 16 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில் வளர்ப்பு மகளாக இருந்த சிறுமிக்கு பிரகாஷ் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.