மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் வாலிபருக்கும் திருமணம் நடத்த நிச்சயக்கப்பட்டது. திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றது. இந்த நிலையில் மணப்பெண்ணின் மாமா மாப்பிள்ளையின் நிதி நிலையை அறிந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.

அப்போது மணமகன் பெயரில் நிறைய கடன் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் மணமகனின் சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதை காரணம் காட்டி கடைசி நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.