
மேற்கு வங்க மாநிலம் கராக்பூரில், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஒரு சாலையில் நடந்த அரசியல் வன்முறை சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திங்கட்கிழமை பட்ட பகலில் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீடியோவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்(TMC) பெண் தலைவர் பெபி கோலே, சிபிஎம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் அனில் தாஸை அடித்து தாக்குவது பதிவாகியுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் குறித்து வெளியாகிய தகவலின்படி, அனில் தாஸ் அவர்கள் கராக்பூர்-கறிதா பகுதியில் உள்ள ஒரு தனி நபரின் சுவரை சட்டவிரோதமாக இடிக்க முயன்றதை கண்டித்து தடைபோட முயன்றார். அதனைக் காரணமாகக் கொண்டு, TMC தலைவர் பெபி கோலே மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனில் தாஸ் மீது அடிதடி, உடை கிழித்தல், நீல இங்க் ஊற்றல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சாலையில் நடந்த இந்த தாக்குதலை பொதுமக்கள் வீடியோபதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். வீடியோவில், அனில் தாஸ் விரைந்து அருகிலுள்ள ஒரு வண்ணக்கடைக்குள் ஒளிந்து கொண்டாலும், தாக்கியவர்கள் உள்ளே புகுந்து அவர்மேல் paint can ஊற்றி அவமானப்படுத்தினர். காயமடைந்த அனில் தாஸ், பின்னர் நேரில் காவல்நிலையத்திற்கு சென்று பெபி கோலே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கான புகாரை பெற்ற போலீசார், வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்ற சம்பவங்கள், பொதுமக்களிடையே அரசியல் வன்முறைகள் குறித்து கவலைக்கும், கேள்விக்கும் இடமளிக்கிறது.
🚨 SHOCKING VIRAL VIDEO from Kharagpur, West Bengal!
TMC leader Baby Koley caught on camera allegedly assaulting senior CPM leader Anil Das – beaten, clothes torn, ink splashed – all in broad daylight as bystanders look on in silence. pic.twitter.com/krYAMBV42i
— Megh Updates 🚨™ (@MeghUpdates) June 30, 2025