2021 ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்த சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கை ஐகோர்ட்டுக்கு மாற்றக்கோரி, அவரது தந்தை மனுத் தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்னதாக சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் கணவர் ஹேம்நாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்வதாக குற்றம் சாட்டி, இந்த வழக்கை ஐகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.