சிங்கப்பூரில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானது சென்டோசா தீவு இங்கு. போதைப்பொருள் உபயோகப்படுத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கிருந்த நட்சத்திர விடுதி ஒன்றில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு நடந்து கொண்டிருந்த விருந்தில் போதை பவுடர் பயன்படுத்திய 49 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 21 வயது முதல் 46 வயது உடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் 35 பேர் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.