கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் பேருந்து நிலையம் அருகே சாலையோரம் ஒரு பெண் தூங்கி கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணிற்கு அருகே படுத்து சேலையை தூக்கி மொபைல் டார்ச் வெளிச்சத்தில் அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பை பார்த்துள்ளார்.

அதன் பிறகு அநாகரிகமாக அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பை தொட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.