கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நெலமங்கலா டவுன் பகுதி உள்ளது. இங்கு சம்பவ நாளில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது பஸ் ஸ்டாண்ட் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் காதல் ஜோடிகள் இருந்தனர். மழை பெய்யும் சமயத்தில் நடுரோட்டில் அவர்கள் காரை நிறுத்தினர். அப்போது அவர்கள் திடீரென முத்த மழை பொழிந்தனர். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் அங்கிருந்தவர்களை கண்டுகொள்ளாமல் அவர்கள் முத்த மழை பொழிந்தனர்.

இதனை சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த காரில் டாக்டர்கள் ஒட்டிக் கொள்ளும் ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததால் அவர்கள் மருத்துவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் பொது இடத்தில் இப்படி காதல் ஜோடிகள் அத்துமீரும் சம்பவங்கள் முகம் சுழிக்க வைப்பதாக இருப்பதால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் அது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sathish Kumar (@sathish_kandagalpura)