
இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், காயம் காரணமாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி வெளியேறினார் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தனது ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் தகவலை வழங்கினார். இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஹென்றி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அவரால் தனது உடற்தகுதியை நிரூபிக்க முடியவில்லை.
இதன் விளைவாக, பட்டத்தை நிர்ணயிக்கும் போட்டியில் விளையாடும் XI இல் அவர் இல்லாமல் களமிறங்க கிவீஸ் அணி முடிவு செய்தது. இறுதிப் போட்டியில் ஹென்றி பங்கேற்க முடியாது என்பதை உணர்ந்தவுடன், அவரது கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது, அந்த காட்சி சமூக ஊடகங்களில் பல ரசிகர்களின் இதயங்களை உடைத்தது. இறுதிப் போட்டியில் ஹென்றிக்கு மாற்றாக கிவீஸ் அணி நாதன் ஸ்மித்தை நியமித்தது.
BREAKING: Matt Henry is OUT of the ICC Champions Trophy final with a shoulder injury 🚨 pic.twitter.com/qmBvTmVsiD
— Sky Sports Cricket (@SkyCricket) March 9, 2025
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 252 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வந்த சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இந்த போட்டி இன்று சர்வதேச துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி இன் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கையானது தற்போதைக்கு ஓங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.