துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. பிளாக் கேப்ஸ் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். ஒருநாள் போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக 15வது டாஸ் தோல்வியையும், கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 12வது டாஸ் தோல்வியையும் இது குறிக்கிறது . இந்த பின்னடைவு இருந்தபோதிலும், இந்திய பந்துவீச்சாளர்கள் களத்தில் தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்தை 50 ஓவர்களில் 251/7 ரன்களில் கட்டுப்படுத்தினர். சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். மறுபுறம், நியூசிலாந்து அணிக்காக டேரில் மிட்செல் 63 ரன்கள் எடுத்தனர்.
அற்புதமான முதல் இன்னிங்ஸைத் தவிர, அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மற்றொரு விஷயம், இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் மைதானத்தில் இருந்தது. இந்த போட்டியை காண சாஹல் ஒரு பெண்ணுடன் வந்துள்ளார். இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதுடன் இந்த பெண் யார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். சாஹலின் இந்தக் காட்சி, அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவுடனான விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் வேளையில் வைரலாகி வருகிறது. பல மாதங்களாக சமூக ஊடகங்களில் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவி வந்த நிலையில், விவாகரத்து கோரி இருவரும் மனு தாக்கல் செய்திருப்பது ஒரு வாரத்திற்கு முன்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
