
தேனி மாவட்டம் பொடியைச் சேர்ந்தவர் திவாகர். இவர் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரது கையில் வைத்திருந்த பை பற்றி கேட்ட போது அதில் சாக்லேட் வைத்திருப்பதாக கூறினார்.
அதில் கிட்கிட் என்ற பெயரிலான சாக்லேட் பாக்கெட்டுகள் இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது கஞ்சா நிரம்பி இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவர் தேனியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து மதுரைக்கு கொண்டு சென்று அங்கிருந்து ரயில் மூலம் பொள்ளாச்சிக்கு கஞ்சாவை கடத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் திவாகரை கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.