நேபாளத்தில் மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 6.4ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள், வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இதில், தற்போதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.