நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருக்கும் நிலையில் அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நாட்டில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பை ஏற்றால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது ஒன்றும் கடினமான விஷயம் கிடையாது. பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சரியான திட்டமிடலுடன் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் பழைய ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்தும் மாநிலங்கள் இனிவரும் காலங்களில் நிதி மேலாண்மை பிரச்சனையை சந்திக்க நேரிடும் என ரிசர்வ் வங்கி சமீபத்திய அறிக்கையில் தெரிவித்திருந்தது. இருப்பினும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை துணிச்சலாக அமல்படுத்தியுள்ளனர். மேலும் தமிழ்நாட்டிலும் திமுக ஆட்சி பொறுப்பை என்றால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்த நிலையில் இதுவரை வாக்குறுதி நிறைவேற்றப்படாதது எதற்காக என்று அரசு ஊழியர்கள் தரப்பில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதோடு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைகள் விடுத்து வருகிறார்கள்.