சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சமையலறையில் சுகாதாரக் கேடு தொடர்பாக செய்தி வெளியானதை அடுத்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனை சமையல் கூடங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி நாகப்பட்டினம் மருத்துவமனை சமையல் கூடத்தை உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு செய்தார்.

அப்போது உணவுப் பொருட்கள், சமையல் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை ஆய்வு செய்ததோடு சமையலறை சுத்தமாக இருக்கிறதா என்பதையும் சமையல் செய்பவர்கள் மற்றும் உதவியாளர்கள் சுத்தம் பேணுகிறார்களா என்பதையும் ஆய்வு செய்துள்ளார். மேலும் தொடர்ந்து அவ்வப்போது கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.